யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றினூடாக இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், கோரிக்கைகளையும், ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
மாறாக மாணவர்களின் உணர்வுகளை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அரசாங்கத்தின் இனவாதம் சார்ந்த அணுகுமுறையாகும்.
மாணவர்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கத்தின் இவ்வாறான விசாரணை நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!