அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால், தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி அவர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை!
யாழில் சங்கிலிய மன்னனின் 407 நினைவு தினம் அனுஷ்டிப்பு!