இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறை மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(18) இவர்களை கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் 5 மீனவர்களும், காங்கேசந்துறை கடற்பரப்பில் இரு படகுகளுடன் 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி குழந்தை பிரசவம்!
எந்தவொரு பயங்கரவாதத் தடைச் சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை – யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்!
T20 உலகக் கிண்ண குழு A இறுதி போட்டியில், இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியைச் சந்தித்த ஜனாதிபதி!