வெளிவந்துள்ள க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில்
வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளனர்.
மேலும், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியோடு தேசிய மட்டத்தில் 9ஆம் இடமாகிய இறுதி இடத்தில் இருந்தது.

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் 8 ஆவது வாரமாக இன்றும் இடம்பெற்றது!
மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!