வவுனியாவில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் சம்பவ இடத்தில் பலி!

வவுனியா-தோணிக்கல் பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், தோணிக்கல் ஆலடி புகையிரதகடவையில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், ரயில் கடவையை கடக்க முயன்ற போது முதியவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version