வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!

கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (31) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

காரின் சாரதி மது போதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version