யாழ்.வரணி கரம்பைக் குறிச்சி ஆழ்வார் மடம் வீதியின் புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதோடு, தரமற்றதாக அமைக்கப்பட்டுவருவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று(07) தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



கரம்பைக்குறிச்சி ஆழ்வார்மடம் வீதியின் புனரமைப்பு 3.5 மில்லியன் ரூபா செலவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவருகிறது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படாமல், தரமற்றதாக வீதி அமைக்கப்பட்டு வருவதாக மேற்பார்வைக் குழுவால் உறுதி செய்யப்பட்டது.



அதனையடுத்து சாவகச்சேரி பிரதேச சபையின் கவனத்துக்கு விடயம் கொண்டுவரப்பட்டது.
இருந்தபோதிலும், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினரின் பதில்கள் திருப்தியளிக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.



அதனைத் தொடர்ந்து இன்று(07) பிற்பகலில் ஒன்று கூடிய பிரதேச மக்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பலாலி வந்த அமெரிக்க விமானம்!
தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு!
முன்னாள் அமைச்சர்’சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்!
பண்ணைக் கடலில் நீந்தச் சென்ற இருவர் பலி!