FIFA உலகக் கிண்ணத் தொடரின் A பிரிவில் நடைபெற்ற போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது.
மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதிவரை கோல் ஏதுவும் போடப்படாமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் முதல் கோலைப் போட்டார்.
எனினும், 8 நிமிடங்களுக்குப் பின்னர் தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.
தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக் அடித்த கோல், நடுவரால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு வெற்றிக்கான கோலைப் பதிவு செய்ததன் மூலம், தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம், தொடக்கப் போட்டியில், தென்னாபிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் A பிரிவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!