FIFA உலகக் கிண்ணத் தொடரின் A பிரிவில் நடைபெற்ற போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது.
மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதிவரை கோல் ஏதுவும் போடப்படாமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் முதல் கோலைப் போட்டார்.
எனினும், 8 நிமிடங்களுக்குப் பின்னர் தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.
தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக் அடித்த கோல், நடுவரால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு வெற்றிக்கான கோலைப் பதிவு செய்ததன் மூலம், தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றியின் மூலம், தொடக்கப் போட்டியில், தென்னாபிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் A பிரிவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

அமெரிக்கா தனது நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றுவதே பேச்சுவார்த்தை தடைப்படக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திருகோணமலையில் யானை தாக்கி பெண் பலி!
வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை – நீதிமன்றில் சட்ட மா அதிபர் அறிவிப்பு!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!