இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க சபையில் வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.
ஆனால், இந்த நாமலும் அந்த நாமலும் ஒன்றா அல்லது இந்த ராஜபக்ஷவும் அந்த ராஜபக்ஷவும் ஒன்றா என்பது தெரியவில்லை. விசாரணைகளில் உண்மை வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!
யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!