அனர்த்தத்தால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வும், புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) அனுராதபுரம் மாவட்டத்தில் இடம் பெற்றது.

இதற்கான பிரதான நிகழ்வு அனுராதபுரம் ராஜாங்கனை விகாரைக்கு அருகில் இடம்பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய,பதவிய,கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேசர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்களே வழங்கிவைக்கப்பட்டன.

முற்றாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20 முதல்!