விளையாட்டு
Trending

T20 சூப்பர் 8, 45 ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில்,45 போட்டியின் சூப்பர் 8 சுற்றின் 5 ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி இரு விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (24) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத் தீர்மானித்தது.

அதற்கமைய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக (Sahibzada farhan) 63 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக,Harry brook 51 பந்துகளில், அதிகூடிய ஓட்டங்களாக 100 ஓட்டங்களை பெற்றார்.

அதிரடியாக விளையாடிய(Harry brook)ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button