இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மடுமாதா தோவாலய யாத்திரைக்காக புறப்படும்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்து அதன்பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button