கால்நடைகள் திருடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானம் – பண்ணையாளர்கள் அறிவிப்பு!

மட்டக்களப்பில் கால்நடைகளை திருடுபவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திராய்மடு மற்றும் பலைமீன்மடு பகுதி பண்ணையாளர்களே இந்த
அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

இவ்வருடம் 40 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறைச்சிக்காக திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், கால்நடைகளை பிடித்து தருபவர்களுக்கு 25 ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version