நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர்.


சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.


இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடியதோடு திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்டுச் சென்றார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் இன்று தேர்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!