யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கார் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு(22) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார், எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்தோடு மோதுண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கார் சேதமடைந்துள்ளபோதிலும், சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்துகள் ஏற்படவில்லை.

Exit mobile version