
கொழும்பு – பதுளை இடையிலான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (27) அதிகாலை, பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தியதலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணித்த சுமார் 40 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டவுடன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us



