இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிப் பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டத்தில் இன்று(13) ஈடுபட்டிருந்தனர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக் கடைகளை அகற்றுவது தொடர்பான பிரேரணை யாழ்மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் அனுமதிக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணை அனுமதிக்கப்பட்டு இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் பழக்கடை வியாபாரிகளால் யாழ். மாநகரசபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



