இலங்கை
Trending

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, ‘இலங்கை பொற்றொலிய கூட்டுத்தாபனம்’ தனது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 பெற்றோல்,24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 317 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்மணிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசல் 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 303 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன்புதிய விலை 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 195 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் Lanka IOC மற்றும் Sinopec Energy Lanka ஆகிய நிறுவனங்கள் இதுவரை தங்களது விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button