இலங்கைவடக்கு மாகாணம்
Trending

யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது!

யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று(09) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ் நகரை அண்டிய பகுதிகளில் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும்,17 வயது சிறுவன் உள்ளிட்ட 09 பேர், போதை மாத்திரைகளுடனும், 04 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button