இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் 7 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 27 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் மேலும் 3 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் தேர்!
ஐந்தே வயதில் உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் சிறுமி!
வெனிசுலா நிலநடுத்தில் உயிரிழந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!
தியதலாவையில் பேருந்து விபத்து: உயிர்ச் சேதங்கள் இன்றித் தப்பிய பயணிகள்!