இலங்கைஉலகம்
Trending

எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை

இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் 7 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் 27 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, இந்த மாதம் மேலும் 3 எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button