
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மீஹால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
75 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான சொத்தை சட்ட விரோதமாக சேர்த்ததாக கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் இந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விமல் வீரவன்ச, உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார்.

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)