இலங்கைவடக்கு மாகாணம்

தேர்தலை பிற்போட அனர்த்தத்தை காரணம் காட்டும் அரசு: சுரேஸ் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு அனர்த்தத்தை அரசாங்கம் காரணம் காட்டக்கூடும் என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்றைய கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆகவே தேர்தலை நடத்த முடியாது எனக் கூறுவார்கள்.

குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் தான் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அழிவுகளை நிவர்த்தி செய்ய முடியும்.

நாங்கள் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை நம்பியிருக்க தேவையில்லை, புலம்பெயர் தேசத்தில் வாழும் மக்கள் எமக்கு உதவக் காத்திருக்கிறார்கள்.
தமிழ் நாடு முதல்வரும் உதவி புரிவதாக கூறியுள்ளார்” -என்றார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button