Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைவடக்கு மாகாணம்
Trending

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு – அமைச்சரின் அறிவிப்பு!

நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 62 பல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவ பீடங்களில் ஐந்து ஆண்டுகள் இளங்கலை பட்டபடிப்பை நிறைவு செய்து உள்ளனர்.

அதன் பிறகு நாடு முழுவதிலுமுள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருட பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இந்த நியமனங்கள் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டன.

மேலும் இந்த பல் அறுவை சிகிச்சை நிபுணர்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவையில் இணைக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video