இலங்கைவடக்கு மாகாணம்

யாழ்ப்பாண நகரில் பாடசாலை மாணவன் உட்பட 10 பேர் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 10 பேர் இவ்வாறு நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும்,போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும், கேரள கஞ்சாவுடன் ஒருவருமாக கைது இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button