
வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், 7 வருடங்களில் வழங்க வேண்டிய இடமாற்றங்கள் 9 வருடங்களைத் தாண்டியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போபோது வடக்கு மாகாண ஆளுநருரிடம் மகஜர் ஒன்றையும் ஆசிரியர்கள் கையளித்தனர்.


Follow Us



