இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!

வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 7 வருடங்களில் வழங்க வேண்டிய இடமாற்றங்கள் 9 வருடங்களைத் தாண்டியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போபோது வடக்கு மாகாண ஆளுநருரிடம் மகஜர் ஒன்றையும் ஆசிரியர்கள் கையளித்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button