இலங்கை
Trending

வெளிநாட்டுச் சிகரெட்களை கடத்திவந்த இலங்கையர் கைது!

60 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து வருகைதந்த குறித்த நபர், தனது மூன்று பயணப் பொதிகளில் 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்களை மறைத்து எடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில்,சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button