
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) காலையில் இடம்பெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வேரஹேராவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
ஒப்பந்தம் கோருவதில் காணப்பட்ட இடர்பாடுகள் காரணமாக, மே 2025 முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி இடைநிறுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



