
யாழ்.சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(03) நாட்டி வைத்தார்.
குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி 68.2 மில்லியன் ரூபாவில், இந்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்,
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோரும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.

Follow Us



