இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு!

காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா – ஓயார் சின்னக்குளம் பகுதியில் இருந்து மாநகர சபைக்குரிய செங்கோலை மீட்டெடுத்தனர்.

முன்னாள் மேயர் அதனை வழங்குமாறு கூறியதாக குறிப்பிட்டு அவருடைய நண்பர் ஒருவர் அங்கு கொண்டுவந்து செங்கோலை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு கைப்பற்றப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றில் நேற்று (02) காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button