இலங்கைவடக்கு மாகாணம்
Trending

தென்மராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்!

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களை தங்கவைக்கப்பட்டுள்ள யாழ். தென்மராட்சி பிரதேச மக்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று(30) நேரில் சென்று பார்வையிட்டார்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 09 இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்ற அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் 137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button