
பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



