இலங்கை
Trending

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உட்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று (07) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தநிலையில், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button