
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று(25) இடம்பெற்றது.
கடந்த ஒரு வாரமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புகளை மேற்கொண்டுவரும் ஐநா வதிவிடப் பிரதிநிதி ‘மார்க் அன்றி பிரான்சி, தமிழ் தேசிய போரவையுடனும் சந்தித்து கலந்துறையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் உட்படப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



