Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி துரையப்பாவில்!

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

நேற்றைய(18) இரண்டம் நாள் போட்டியில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.கே.பிரேமதிலக தலைமையில் நேற்று முன்தினம் இந்தப் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில் விளையாட்டரங்குக்கு வருகை தந்த ஆளுநரை, தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பார்வையிட்டார்.

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இதன்போது நடைபெற்றன.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

இந்தநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் உயர் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video