இலங்கைஉலகம்மேல்மாகாணம்
Trending

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மால் இன்று ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.

அவரது முன்னிலையின்மை தொடர்பாக ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ, பிரித்தானிய கடற்படையால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டமை தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தன்னால் இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாதென சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button