Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

சுரேஷ் சாலேவின் அடிப்படை உரிமை மனு, செப்டெம்பர் 25 பரிசீலனைக்கு!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி,இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button