உலகம்

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பிரேரணை செனட் சபையில் தோல்வி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

அந்தப் பிரேரணைக்கு எதிராக 52 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு அமெரிக்க காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எனினும், செனட் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்ததால், குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button