
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
சுமேதங்கபுர பகுதியில் நேற்று காலை நடமாடிய காட்டு யானை, பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
குறித்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow Us



