
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (22) காலையில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் 46 வயதுடைய இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட போதே குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Follow Us



