
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜக்கிய நாடுகள் சபை அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
மேலும், மத்திய கிழக்கில் இதுவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், லெபனானில் மட்டும் 8 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Follow Us



