இலங்கை
Trending

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர்.

தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

அந்தச் சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கிதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button