Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்
Trending

மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து சுவிஸுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில சர்வதேச விமான சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் சூரிக் நகரத்துக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

துபாயை தளமாகக் கொண்ட Emirates விமான நிறுவனம் கடந்த வாரம் முதல் துபாய்–சூரிக் வழித்தடத்தில் தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதேபோல் அபுதாபியை தளமாகக் கொண்ட Etihad Airways நிறுவனமும் விரைவில் சூரிக் நோக்கி தனது விமான சேவைகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான Swiss International Air Lines, எதிர்வரும் புதன்கிழமை முதல் சூரிக் மற்றும் துபாய் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதே நாளில் சூரிக் மற்றும் அபுதாபி இடையேயான விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பிராந்திய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video