இலங்கை

முந்தல் விபத்தில் மூவர் பலி: 10 பேர் படுகாயம்!

புத்தளம் – முந்தல் – நவதன்குளம் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(12) காலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button