Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

QR இன்றி எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ ரத்து – பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை!

QR முறைமையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வது வரை செல்லும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா எச்சரித்துள்ளார்.

கையிருப்பிலுள்ள மற்றும் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகளுக்கிடையே வித்தியாசம் காணப்பட்டால், கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அது அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது வரை செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கோ தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும், அதற்கமைய ஒவ்வொருவரும் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எவராவது கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்கள் உங்களது உரிமையை இல்லாது செய்கிறார்கள் எனவும், எனவே உடனடியாக அதற்கு எதிராகச் செயல்படுமாறும் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவர் .ஜே. ராஜகருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video