இலங்கைஉலகம்விளையாட்டு

லசித் மலிங்கவின் புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு!

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆரம்பித்துள்ள ‘வேகப்பந்து வீச்சாளர் தேடல்’ திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை மூவாயிரத்து 500 ற்கும் மேற்பட்ட வீர்ரகள் இதில் பதிவு செய்துள்ளதாக லிசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதால், பதிவு செய்வதற்கான இணையத்தள இணைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பதாரர்களுக்காக ஏப்ரல் 14 ஆம் திகதி மீண்டும் இந்த இணைப்பு திறக்கப்படும் என மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

மலிங்கவின் இந்த முயற்சி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களைக் கண்டறிய உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button