
யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.



வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது.



அதனால் தென்னை மரம் தீப்பற்றியதோடு, வீட்டின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.
மேலும் இலத்திரனியல் சாதனங்களும் சேதமடைந்துள்ளன.
Follow Us



