இலங்கைஉலகம்
Trending

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது!

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே குறித்த நபர் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவரிடமிருந்து 12 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான நபர் கம்பளையைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button