இலங்கைவடக்கு மாகாணம்
Trending

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்திலுள்ள குடத்தனை மக்களால் நிவாரண உதவி!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முல்லைத்தீவு குமுளமுனை கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(23) உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

புலம்பெயர் தேசத்திலும்,தாயகத்திலும் வாழ்ந்துவரும் குடத்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்களால் இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கிராம அலுவலரின் தெரிவின் அடிப்படையில் 100 குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குமுளமுனை கிழக்கு கிராம உத்தியோகத்தர், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் குடத்தனை வடக்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button